(நா.தனுஜா)
அமெரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்க மற்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் செயலாளர் அன்ரனி ஜே பிளின்கென் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இருவாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருப்பதுடன், இதன்போது பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான தமது கடப்பாட்டை அன்ரனி பிளின்கென் மீளுறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் அண்மையகாலங்களில் இந்தியாவிற்கு அடுத்ததாக அமெரிக்கா உதவிகளை வழங்கிவருவதுடன், அமெரிக்காவுடனான உயர்மட்ட சந்திப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றன.
குறிப்பாக அமெரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்க சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்திருந்ததுடன் நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து அவரிடம் விளக்கமளித்திருந்தார்.
அதனோடு இணைந்ததாகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே பிளிங்கனுடனான சந்திப்பும் இடம்பெற்றிருக்கின்றது.
அதேவேளை அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் மற்றும் அமெரிக்கத்திறைசேரி ஆகியவற்றின் உயர்மட்டப்பிரதிநிதிகள் அடங்கிய குழு கடந்த வாரம் இலங்கைக்கு வருகைதந்திருந்ததுடன், நாட்டின் பொருளாதார நிலைவரம் மற்றும் இந்நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்கு அவசியமான உதவிகள் என்பன தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே பிளின்கென் மற்றும் அவரது பாரியாரும் வெள்ளை மாளிகை அமைச்சரவை செயலாளருமான எவான் ரயன் ஆகியோரை இருவாரங்களுக்கு முன்னர் சந்தித்த இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்க அவர்களிடம் நாட்டின் நிலைவரம் தொடர்பில் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM