எரிபொருள் பற்றாக்குறையினால் ரயில் சேவை முழுமையாக பாதிப்படைய கூடும் : இன்று  26 ரயில் சேவைகள் இரத்து  

Published By: Digital Desk 4

29 Jun, 2022 | 06:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரயில்வே சேவையாளர்கள் சேவைக்கு சமுமளிப்பதற்கு எரிபொருளை விநியோகிக்க உரிய தரப்பினர் அவதானம் செலுத்தாவிடின் எதிர்வரும் நாட்களில் ரயில் சேவை மேலும் பாதிக்கப்படும். பொது மக்களின் பிரதான போக்குவரத்து ஊடகமாக ரயில் சேவை காணப்படுகின்ற நிலையில் பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு போக்குவரத்து அமைச்சு உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலர் கசுன் சாமர வலியுறுத்தியுள்ளார்.

ரயில் சேவைகள் நாளை முதல் அதிகரிப்பு - தூர பிரதேச ரயில் சேவைகள் ஆரம்பிக்காது  | Virakesari.lk

 அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மிக மோசமான தீவிரமடைந்துள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக புகையிரத கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் சேவைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் நகரங்களுக்கிடையிலான ரயில், தூரசேவை பயணிகள் ரயில், அலுவலக ரயில் சேவை உள்ளிட்ட 26 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வாதுவை, பாணந்துறை, றம்புக்கனை, மீரிகம, வெயாங்கொட, அம்பேபுஸ்ஸ, நீர்கொழும்பு, மாதம்பே, மற்றும் அவிசாவெல்ல ஆகிய பகுதிகளுக்கான அலுவலக ரயில்கள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டன. அத்துடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி செல்லும் உதயதேவி ரயில் மற்றும் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி புறப்படும் ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரயில் சேவையும் இவ்வாறு  இரத்து செய்யப்பட்டன.

அவிசாவெல்ல நோக்கி புறப்படும் பொதி விநியோக சேவை ரயில் இரத்து செய்யப்பட்டதால் மருதானை ரயில் நிலையத்தில் அவிசாவெல்ல ரயில் நிலையம் வரை விநியோகிக்கும் 300 பொதிகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த பொதிகள் விரைவாக விநியோகிக்க வேண்டியவை.

தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவையான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் ரயில்சேவையாளர்கள் சேவையில் ஈடுப்படுகிறார்கள்.

ரயில் சேவையாளர்களுக்கு தங்குமிட வசதிகள் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான சேவையாளர்கள் எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் சேவைக்கு சமுகமளிப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள்.

பொது மக்கள் அதிகளவில் ரயில் சேவையினை பயன்படுத்தும் நிலையில் ரயில் சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முறையான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்காவிடின் இனி வரும் நாட்களில் ரயில் சேவை மேலும் பாதிக்க கூடும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22