(இராஜதுரை ஹஷான்)
ரயில்வே சேவையாளர்கள் சேவைக்கு சமுமளிப்பதற்கு எரிபொருளை விநியோகிக்க உரிய தரப்பினர் அவதானம் செலுத்தாவிடின் எதிர்வரும் நாட்களில் ரயில் சேவை மேலும் பாதிக்கப்படும். பொது மக்களின் பிரதான போக்குவரத்து ஊடகமாக ரயில் சேவை காணப்படுகின்ற நிலையில் பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு போக்குவரத்து அமைச்சு உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலர் கசுன் சாமர வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மிக மோசமான தீவிரமடைந்துள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக புகையிரத கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் சேவைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் நகரங்களுக்கிடையிலான ரயில், தூரசேவை பயணிகள் ரயில், அலுவலக ரயில் சேவை உள்ளிட்ட 26 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வாதுவை, பாணந்துறை, றம்புக்கனை, மீரிகம, வெயாங்கொட, அம்பேபுஸ்ஸ, நீர்கொழும்பு, மாதம்பே, மற்றும் அவிசாவெல்ல ஆகிய பகுதிகளுக்கான அலுவலக ரயில்கள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டன. அத்துடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி செல்லும் உதயதேவி ரயில் மற்றும் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி புறப்படும் ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரயில் சேவையும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டன.
அவிசாவெல்ல நோக்கி புறப்படும் பொதி விநியோக சேவை ரயில் இரத்து செய்யப்பட்டதால் மருதானை ரயில் நிலையத்தில் அவிசாவெல்ல ரயில் நிலையம் வரை விநியோகிக்கும் 300 பொதிகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த பொதிகள் விரைவாக விநியோகிக்க வேண்டியவை.
தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவையான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் ரயில்சேவையாளர்கள் சேவையில் ஈடுப்படுகிறார்கள்.
ரயில் சேவையாளர்களுக்கு தங்குமிட வசதிகள் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான சேவையாளர்கள் எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் சேவைக்கு சமுகமளிப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள்.
பொது மக்கள் அதிகளவில் ரயில் சேவையினை பயன்படுத்தும் நிலையில் ரயில் சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முறையான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்காவிடின் இனி வரும் நாட்களில் ரயில் சேவை மேலும் பாதிக்க கூடும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM