(நா.தனுஜா)
இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகப்பாரிய தட்டுப்பாடு டொலருக்கும் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கும் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு என்று கூறப்படும் கருத்தைத் தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிவித்திருக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அமால் குமாரகே, மாறாக இலங்கையில் சிறந்த தலைமைத்துவத்திற்குக் காணப்படும் தட்டுப்பாடே மிகப்பாரியதும் தீவிரமானதுமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முற்றாக முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கான நடவடிக்கைகள் எவையும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படாத நிலையில், இதுகுறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
'எரிபொருள், எரிவாயு, டொலர் ஆகியவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடே இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. மாறாக இலங்கையில் சிறந்த தலைமைத்துவத்திற்கே தட்டுப்பாடு நிலவுகின்றது.
உரியவாறு கையாளக்கூடிய ஒவ்வொரு நெருக்கடியும் ஆபத்தாக விரிவடைந்து, அந்த ஆபத்து வேறோர் பிரச்சினையைத் தோற்றுவிக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் உன்னிப்பாக அவதானித்தால், அங்கு தலைவர்களின் தலைமைத்துவத்தில் குறைபாடு இருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்' என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM