தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்த வேண்டிய எந்தவொரு தேவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கிடையாது. இனவாதிகளுக்கும் மத்தியஸ்த போக்குடன் கூடியவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடுகளே நெருக்கடிக்குக் காரணமாகும் என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தும் நிகழ்ச்சிநிரல் எம்மிடம் இல்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கட்சிகளை பிளவுபடுத்துவதில் குறியாக இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கேசரிக்கு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது மிகவும் பலமான கட்சியாகும். தமிழ் மக்களின் பிரதான கட்சியும் அதுவேயாகும்.
இத்தகைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இரண்டாக பிளவுப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை நாம் வழங்கவுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் அந்த கட்சி பலமாக செயற்பட வேண்டும்.
ஆகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிளவுப்படுத்த வேண்டிய எந்தவொரு தேவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கிடையாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இனவாத போக்குடன் செயற்பட கூடியவர்களுக்கும் மத்தியஸ்த போக்கினை கொண்டிருப்பவர்களுக்கும் இடையிலேயே பிரச்சினை காணப்படுகின்றது.
இந்த இரண்டு தரப்புகளுக்கும் பெரும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதன்காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது. இதனை பிளவு என்று கூறவும் முடியாது. கருத்து வேறுபாடு மாத்திரமேயாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM