இலங்கை மின்சார சபை 835வீத மின்கட்டண அதிகரிப்பை கோரியுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எரிபொருள் இல்லாத இலங்கையின் மிகவும் நட்டத்தில் இயங்கும் அரசாங்க ஏகபோக நிறுவனமான இலங்கை மின்சார சபை அதிர்ச்சி தரும் 835 வீத கட்டண அதிகரிப்பை ஏழை நுகர்வோரிடமிருந்து கோரியுள்ளது என மின்சார ஒழுங்குபடுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்னாசிய நாடு அந்நியசெலாவணி பற்றாக்குறை காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது,மின்சார உற்பத்தி மற்றும் போக்குவரத்திற்கான எரிபொருளை கூட இறக்குமதி செய்ய முடியாத அளவிற்கு டொலர் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை மின்சார சபை 65 பில்லியன் ரூபாய் நஸ்டத்தை சந்தித்துள்ளதுடன் அதிகளவு மானியத்தை பெறும் சிறிய மின்சார கொள்வனவாளர்களிடமிருந்து 835வீத கட்டண அதிகரிப்பை கோரியுள்ளது என இலங்கையின் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது 30 கிலோவோட்ஸிற்கு பயன்படுத்துபவர்கள் மாதாந்த கட்டணமாக 54.ரூபாய் 27 சதத்தினை செலுத்துகின்றனர், இலங்கை மின்சார இதனை 507.65 சதமாக அதிகரிப்பதற்கான அனுமதியை கோரியுள்ளது என இலங்கையின் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான நுகர்வோரினால் இவ்வளவு பாரிய விலை அதிகரிப்பினை தாங்கிக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர் ஜானகரட்ணநாயக்க இதன் காரணமாக அவர்கள் கேட்டதை விட குறைவாக அதிகரிப்பதற்காக( அரைவாசிக்கும் குறைவாக)திறைசேரியிடமிருந்து நேரடி மானியத்தை பெறும் யோசனையை முன்வைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாவனை கட்டண அதிகரிப்பு குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை ஆனால் வர்த்தக மற்றும் கைததொழில்துறையினரின் மின்கட்டணங்கள் 43 முதல் 61 வீதத்தினால் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM