நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும் - சபாநாயகர்

Published By: Digital Desk 4

28 Jun, 2022 | 10:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் பேசப்படும் தேவையற்ற பேச்சுக்களுக்கு அதிக பிரபல்லியம் வழங்குவதை தவிர்த்து மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.

அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும்.  தவறு செய்தவர்களை கண்டு பிடித்து தண்டனை பெற்றுக்கொடுத்தால் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

Articles Tagged Under: மஹிந்த யாப்பா அபேவர்தன | Virakesari.lk

பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று இன்றைய தினம் கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடைபெற்றது. அங்கு விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 பாராளுமன்ற செயலாளர் நாயகம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில் அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும்  கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சபாநாயகர்;

பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களையும் வேண்டாம் என மக்கள் சொல்வார்களாயின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? .அமைச்சரவை கலைக்கப்பட்டு, பிரதமர் பதவி விலக்கப்பட்டு என்ன நடந்தது? கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைத்து விட்டதா,? அதே வேளை, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு என்ன நடந்தது? எரிபொருள் கிடைத்து விட்டதா அத்தியாவசிய பொருட்கள் கிடைத்து விட்டதா? அடுத்தது என்ன?

பாராளுமன்றத்தைக் கலைத்து மீண்டும் தேர்தல் நடத்தினால் மீண்டும் 225 பேர் வருவர். அப்போது எல்லாம் சரியாகிவிடுமா? அப்படியானால் அரசியலமைப்பை வீசி எறிந்து விடுவோமா? மக்களுக்கான பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்ற வேண்டும் அதனை பாதுகாப்பது அவசியம் நாடு மற்றும் எதிர்கால பரம்பரை தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். பாராளுமன்றம் தொடர்பில்  மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டியது அவசியமாகும்.

புதிதாக அரசாங்கம் அமைக்கப்பட்டு புதிதாக வந்துள்ளவர்களும் அதையே செய்து விட்டு போய்விடுவர்.அந்த நிலையிலும் நாம் வாழ வேண்டியுள்ளது.

எமது பிள்ளைகள் வாழ வேண்டும். கொரோனா சூழ்நிலையிலும் தொடர்ச்சியாக பாடசாலைகள் மூடப்பட்டன. மீண்டும் இப்போதும் பாடசாலைகள் மூடப்படுகின்றன நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?.

அதேவேளை, மக்கள் தமது தேவைகளுக்காக பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் நிலையில்  சரியான புரிந்துணர்வை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்கள் அனாவசியமாக பேசுவதை பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் நிராகரிக்க வேண்டும்.

அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கும் போது தான் நாடும் குழப்பமடைந்து மக்களும் குழப்பமடைய நேர்கிறது.

அதனால் மக்கள் 225 பேரையும் வேண்டாம் என்று கூறுவர். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன வீடு தீக்கிரையாக்கப்படுகிறது சொத்துக்கள் அளிக்கப்படுகின்றன. அவ்வாறு செய்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

1983ஆம்  ஆண்டு எனது காலத்தில்  14 பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 80 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன . எனது வீடும் எரிந்தது. குழந்தையின் பால் போத்தல் மட்டுமே மிஞ்சியது. அவ்வாறு செய்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

நாட்டில் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது அரசியலமைப்பு. அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டு, இந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். எமது கடமை முடிந்து விடலாம் எனினும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் .

நாம் பாதுகாக்க வேண்டிய ஜனநாயகம் தொடர்பில் எமக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதில் எல்லோரதும் தவறு உள்ளது. அந்த தவறு நாடு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மாற்றப்பட வேண்டும்.

பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அரசியல் தலைவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் சரியாக செயல்படுவதில்லை சிலர் சரியாக செயல்படுகின்றனர்.

இங்கு மட்டும் அல்ல, உலகில் எங்கும் அப்படித்தான் நடக்கிறது. அதிகளவு நன்மை செய்பவர்களை பலப்படுத்தி தைரியப்படுத்த வேண்டும் அதுதான் நாம் செய்ய வேண்டியது.

தவறுகளை சுட்டிக் காட்டுவது அவசியம். எமது பொருளாதார வீழ்ச்சி இன்று நேற்று வந்ததல்ல.அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்களா? அல்லது அவர்களுக்கு தண்டனை வழங்குவதால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? அப்படியானால் நெருக்கடி நிலைக்கு தீர்வு என்ன? அவர் பொறுப்பு கூறவேண்டும் இவர் பொறுப்பு கூறவேண்டும் என கூடிக் கொண்டிருந்தால் சரியா?. எனவே மக்களுக்கு சரியான தவகவல்களை வழங்கி அவர்களை ஜனநாயக நீராேட்டத்துக்குள் வரவழைக்க வேண்டிய பொறுப்பை ஊடகங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கதிர்காமத்தில் பஸ் நிலையத்திற்கு அருகில் தவறான...

2025-02-15 12:56:25
news-image

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

2025-02-15 12:43:07
news-image

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களை பயன்படுத்தும்...

2025-02-15 12:42:01
news-image

கடந்த 15 வருடங்களாக கல்விக் கல்லூரிகள்...

2025-02-15 12:16:54
news-image

கடவத்தையில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-02-15 12:00:48
news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37