(எம்.மனோசித்ரா)
எரிபொருள் விலை அதிகரிப்புக்களை கருத்திற் கொண்டு ரயில் போக்குவரத்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச கொள்கைகளுக்கு அமைய பயணிகள் போக்குவரத்துக்காக இலங்கைப் ரயில் திணைக்களம் சலுகை அடிப்படையிலான கட்டண முறையைப் பின்பற்றுகின்றது.
ஆனாலும், அண்மைக் காலங்களில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புக்களால் திணைக்களத்தின் மீண்டெழும் நட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையால், திருப்திகரமான ரயில் சேவைகளை மேற்கொண்டு செல்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் திணைக்களம் ஈட்டுகின்ற வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது.
அதற்கமைய ஐந்து வருடங்களுக்கும் மேலாக திருத்தம் செய்யப்படாத ரயில் பயணிகள் போக்குவரத்துக் கட்டணம், பதினான்கு வருடங்களுக்கு மேலாக திருத்தம் செய்யப்படாத சரக்குகள் போக்குவரத்து மற்றும் தபால் போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சரக்குகள் போக்குவரத்துக்காக அறவிடப்படும் புகையிரதக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM