கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கான எரிபொருட்கள் கடந்த (23) கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு வழங்கப் பட்டுக் கொண்டிருந்த நிலையில் நபரெருவரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவண பவன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப் பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதாவது அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அரச அதிகாரி ஒருவரை தாக்க முற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் கானப்படுகின்ற வைத்தியர் பற்றாக்குறை மற்றும் ஏனைய பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தங்களுடைய அயராத சேவைகளை ஆற்றி வரும் சுகாதாரத்துறையினர் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்சியாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் குழுவினரும் பதுக்கல் வியாபாரிகளும் இவ்வாறான அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்து அவர்கள் எரிபொருட்களை பெற்றுக் கொள்ள முடியாதவாறு அவர்களது கடமைகளும் செல்வதற்குரிய எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு இடையூறுகளை விளைவித்து வருகின்ற இந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM