(எம்.மனோசித்ரா)
நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக எரிபொருள் பதுக்கல் தொடர்பில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 64 000 லீற்றருக்கும் அதிக பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்க்கப்பட்டுள்ளதோடு , 600 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அத்தோடு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலுள்ள எரிபொருள் தாங்கிகளை திறந்து காண்பிக்குமாறு பொதுமக்களால் பொலிஸார் வலியுறுத்தப்படுவதாகவும் , அனைவரதும் பாதுகாப்பினைக் கருதி அவ்வாறான செயற்பாடுகளில் தலையிட வேண்டாம் என்றும் பொலிஸ் தலைமையகத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
எரிபொருள் பதுக்கல் தொடர்பில் 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை வரை 670 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் போது 675 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 21 636 லீற்றர் பெற்றோல் , 33 462 லீற்றர் டீசல் , 11 100 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக எரிபொருட்களைப் பதுக்கும் இவ்வாறான சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிஸ் உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே அவர்களுடன் அநாவசியமாக மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று பொது மக்களிடம் கேட்டு;க் கொள்கின்றோம். பொலிஸாருடன் பொது மக்கள் முரண்படும் போது தேவையேற்படின் உயர் பொலிஸ் உத்தியோகத்தரின் ஆலோசனைக்கமைய மேலதிக பொலிஸாரை கடமையில் இணைத்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு முரண்பாடுகளின் போது அவற்றினை காணொளியாக பதிவு செய்து கொள்வதற்கும் , தேவையேற்படின் ஏனைய சட்ட நடவடிக்கைகளின் போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலுள்ள தாங்கிகளை திறந்து காண்பிக்குமாறு பொதுமக்கள் , பொலிஸாரை வலியுறுத்துகின்றனர். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் தலைமையகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM