ஆர்.ராம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரண்டு தெரிவுகளே உள்ளனவென்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து மேலும் தெரிவித்தஅவர்,
ஜனாதிபதி கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்புவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் ஊடாக அல்லது மக்கள் போராட்டங்களின் ஊடாக மட்டுமே முடியும்.
இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக சகல அதிகாரங்களுடனும் இருந்த மார்க்கோஸ், அப்பதவியில் இருந்து மக்களின் கிளச்சியினால் வெளியேற்றப்பட்டார்.
அவ்விதமாக தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் ஊடாக பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
அவ்வாறில்லையேல், பாராளுமன்றத்தின் ஊடாக அவருடைய அதிகாரங்களை முழுமையாக குறைப்பதன் ஊடாக ஆட்சி, அதிகார கட்டமைப்பிலிருந்து ஒதுக்கிக் கொள்ள முடியும்.
தற்போதைய நிலையில் மேற்படி இரண்டு முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தாக்கங்கள் தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மறுபக்கத்தில் உத்தேச 21ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அந்த திருத்தச்சட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
துரதிஷ்டமாக, உத்தேச 21ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடையே இணக்கமான நிலைப்பாடொன்று எட்டுவதில் பெரும் இடைவெளிகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, எதிர்க்கட்சிகள் அத்திருத்தச்சட்டத்தினை முழுமையாக எதிர்க்கும் மனோநிலையில் உள்ளன. ஆகவே பாராளுமன்ற முறையிலும் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைக்க முடியுமான என்பதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM