நைரோபியில் இருந்து அருள்கார்க்கி
நைரோபி COP15 மாநாட்டை முன்னிருத்தி
ஐக்கிய நாடுகளின் சர்வதேச உயிர்ப்பல்வகைமை மாநாடு ( convention on biological diversity ) ஜுன் 21 தொடக்கம் ஜுன் 26 வரை கென்ய தலைநகர் நைரோபியில் ஆரம்பமானது. இதன் இறுதி மாநாடு சீனாவின் குன்மிங் நகரில் நாடாத்த திட்டமிட்டிருந்த போதும் கொவிட் பரவலின் நிச்சயமற்ற தன்மை காரணமாக கனடாவின் மொன்றியல் நகரில் இம்மாநாடு இவ்வருடம் டிசம்பர் மாதம் நடாத்தப்படும்.2020 ஆம் ஆண்டு ஏற்கனவே அனைத்து நாடுகளும் தமது யோசனைகளை சமர்ப்பித்துள்ள நிலையில் நைரோபி மாநாட்டில் 21 இலக்குகளின் கீழ் அவை தொகுக்கப்பட்டுள்ளன.இலங்கையின் பல்லுயிர்சார் யோசனைகளும் அவற்றில் உள்ளடங்குகின்றது.அதில் 21 ஆம் இலக்கானது பால்நிலை சார்ந்து உயிர்ப்பல்வகைமையை பாதுகாப்பதற்கான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.அந்தவகையில் இலங்கையில் பெருந்தோட்டத் தொழில்துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் நிலையையும் பல்லுயிர் பாதுகாப்பின் அவசியத்தில் அவர்களின் பங்களிப்பையும் வலியுறுத்துவதே இந்த கட்டுரையாகும்.
பாலினம் மற்றும் பல்லுயிர் என்றால் என்ன?
பாலினம் என்ற சொல் ஒரு பெண் அல்லது ஆணுடன் தொடர்புடைய பண்புகள், திறன்கள் மற்றும் நடத்தைகள் பற்றிய சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்ட எதிர்பார்ப்புகளைக் குறிக்கிறது. பாலினம் பெண் மற்றும் ஆண்பால் என்பதை வரையறுக்கிறது. ஆண்களும் பெண்களும் வகிக்கும் சமூகப் பாத்திரங்களையும், அவர்களுக்கு இடையேயான அதிகார உறவுகளையும் பாலினம் வடிவமைக்கிறது, இது இயற்கை வளங்களின் பயன்பாடு மற்றும் மேலாண்மையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.பாலினம் அல்லது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான உயிரியல் வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல; மாறாக, பாலினம் கலாச்சாரம் மற்றும் சமூக விதிமுறைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, மதிப்புகள், விதிமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சட்டங்களைப் பொறுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்களும் ஆண்களும் வெவ்வேறு பாலின பாத்திரங்களையும் உறவுகளையும் ஏற்றுக்கொண்டனர். அதே சமூகத்தில், பாலின பாத்திரங்கள் இனம்/இனம், வர்க்கம்/சாதி, மதம், இனம், வயது மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் ஆகியவற்றால்வேறுபடுகின்றன.பாலினம் மற்றும் பாலின பாத்திரங்கள் பின்னர் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் எதிர்கொள்ளும் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் சூழலியல் வாய்ப்புகள் மற்றும் தடைகளில் தாக்கம் செலுத்துகின்றது.
பாலினம் மற்றும் பல்லுயிரியலை இணைத்தல்.
பல்லுயிர் தொடர்பான பாலினப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்வது, பல்லுயிரியலின் பயன்பாடு, முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் பாலின பாத்திரங்கள் மற்றும் உறவுகளின் செல்வாக்கைக் கண்டறிவதை உள்ளடக்கியது. பெண்கள் மற்றும் ஆண்களின் பாலினப் பாத்திரங்களில் வெவ்வேறு தொழிலாளர் பொறுப்புகள், முன்னுரிமைகள், முடிவெடுக்கும் ஆற்றல் மற்றும் அறிவு ஆகியவை அடங்கும், இது பெண்களும் ஆண்களும் பல்லுயிர் வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் மற்றும் நிர்வகிக்கிறார்கள் என்பதைப் தீர்மானிக்கின்றது.உதாரணமாக, பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளில் பாலின வேறுபாடுகள் காரணமாக, கிராமப்புற ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பெண்கள் பொதுவாக காடுகளிலுள்ள தாவர உணவுகளின் முக்கிய சேகரிப்பாளர்களாக உள்ளனர், அதே நேரத்தில் ஆண்கள் மரம் மற்றும் காட்டு விலங்குகளின் மூலமான அறுவடைகளை செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள். இதன் விளைவாக, பெண்களும் ஆண்களும் வெவ்வேறு இனங்கள், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற பல்வேறு அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.பல்லுயிர் மேலாண்மையில் ஆண்கள் மற்றும் பெண்களின் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் மற்றும் முடிவெடுப்பதில் பங்கேற்கும் திறன் ஆகியவை நாடுகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையில் வேறுபடுகின்றன. இருப்பினும், பெரும்பாலான சூழ்நிலைகளில் பாலின அடிப்படையிலான வேறுபாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன, அவை ஆண்களுக்கு சாதகமாக இருக்கும்.
பொருளாதார வாய்ப்புகள் மற்றும் நிலம், பல்லுயிர் வளங்கள் மற்றும் பிற உற்பத்திச் சொத்துக்கள் மீதான அணுகல் மற்றும் கட்டுப்பாடு, முடிவெடுக்கும் சக்தி, அத்துடன் பல்லுயிர் இழப்பு, காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஆகியவற்றில் கடுமையான பாலின வேறுபாடுகள் தெளிவாக உள்ளன.
பல்லுயிர் பாதுகாப்பு, நிலையான பயன்பாடு மற்றும் அதன் பலன்களைப் பகிர்தல் தொடர்பான திறமையான கொள்கைகளைத் தெரிவிக்க, பாலின-வேறுபட்ட பல்லுயிர் நடைமுறைகள், பாலின அறிவு பெறுதல் மற்றும் பயன்பாடு, அத்துடன் வளங்களின் மீதான கட்டுப்பாட்டில் உள்ள பாலின ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு அம்பலப்படுத்த வேண்டும்.பல்லுயிரியலின் பாதுகாப்பு மற்றும் நீடித்த பயன்பாட்டில் பாலின வேறுபாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளின் தாக்கங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் இந்த வேறுபாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் பல்லுயிர் கொள்கைகள், திட்டமிடல் மற்றும் நிரலாக்கத்தால் பெண்களும் ஆண்களும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் குறிக்கின்றது.
அந்தவகையில் மலையக பெருந்தோட்ட பெண்கள் பல்லுயிர் பாதுகாப்பு செயன்முறையில் முக்கியமான இடத்தில் இருக்க வேண்டியது அவசியம்.
பெண்ணிய செயற்பாட்டாளர் மிரிளாளினி நைரொபியில் சந்தித்துப் பேசுகையில் மலையக பெருந்தோட்ட பெண்கள் 100% சதவீதம் இயற்கையுடன் வாழ்பவர்கள்.அவர்களின் உழைப்பு இயற்கையில் தங்கியுள்ளது. எனவே உயிரியல் பன்முகத்தன்மையுடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்புள்ளது. தேயிலைக் கொழுந்து பறிப்பதுடன் மாத்திரம் அவர்களை மட்டுப்படுத்தியுள்ளமை ஒரு ஏற்றத்தாழ்வாகும். முக்கியமாக உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய அறிவும் அனுபவமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.கடந்த 200 வருடகாலமாக மலையக மக்கள் தேயிலைத் தொழில்துறையூடாக பல்லுயிர் பாதுகாப்புக்கு அளப்பரிய பங்காற்றி வருகின்றனர். ஆயினும் 2020 இற்கு பிந்தைய உலகலாவிய பல்லுயிர் நெருக்கடியில் பெருந்தோட்ட பெண்களும் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதேபோல் இன்று ஐ.நா பல்லுயிர் பாதுகாப்பு பொறிமுறையில் உள்ளடக்கப்பட்டுள்ள 22 இலக்குகளில் பெண்களை மையப்படுத்திய இலக்குகள் மிகக் குறைவாகவே உள்ளன.அதிலும் ஆசிய பிராந்தியத்தை மையப்படுத்திய இலக்குகளில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கின்றோம் என்று கூறினார்.
இலங்கை சுற்றாடல் அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி பணிப்பாளர் திருமதி சுராணி பத்திரன அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.அவரிடம் இது தொடர்பாக வினவுகையில் தேசிய கொள்கை திட்டமிடலின் ( National action plan ) போது இலங்கையின் பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளிலும் இலங்கையின் உயிரியல் பன்முகத்தன்மை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.பெண்களை இணைத்துக்கொண்டு இலங்கையில் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதற்கான திட்டங்களையும் எதிர்காலத்தில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் டிசம்பர் மாதம் கனடாவின் இடம்பெறவிருக்கும் COP15 இறுதி அமர்வில் இந்த யோசனைகளை இறுதி வடிவத்துக்கு கொண்டுவந்து நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.எனவே அந்த சமயத்தில் இலங்கையும் தனது உயிரியல் பன்முகத்தன்மை பாதுகாப்பு குறித்த வேலைத்திட்டங்களுக்கு நிதியை பெற்றுக்கொள்வதற்கும் அதனை நாட்டின் அனைத்து
மக்களையும் சென்றடையக்கூடிய வகையில் பிரசாரப்படுத்துவதும் முக்கியமாகும்.குறிப்பாக மலையக பெருந்தோட்ட பெண்களையும் கிராமப்புற பெண்களையும் உயிரியல் பன்முகத்தன்மையுடன் இணைத்து தேசிய திட்டங்களை முன்மொழிவதும் நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM