(நா.தனுஜா)
அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்டக்குழு இன்றைய தினம் (26) இலங்கையை வந்தடைய இருப்பதுடன், இதன்போது இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து அவர்கள் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.
அமெரிக்க திறைசேரியின் ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபேர்ட் கப்ரொத் மற்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் கெலி கெய்டெலிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக்குழு எதிர்வரும் புதன்கிழமை (29) வரை இலங்கையில் தங்கியிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொருளியலாளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிக்ள உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளது.
இச்சந்திப்புக்களின்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவக்கூடிய வழிமுறைகள், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு இலங்கையர்கள் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் நிலைபேறானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில் பிரதானமாக ஆராயப்படவுள்ளது.
இந்த விஜயமானது இலங்கை மக்களின் பாதுகாப்பு மற்றும் சுபீட்சம் ஆகியன தொடர்பில் அமெரிக்கா கொண்டிருக்கும் கடப்பாட்டை மீளவலியுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். 'தற்போது இலங்கையர்கள் அவர்களது வரலாற்றில் மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஜனநாயகக்கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதற்குமான எமது உதவிகள் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாக இருக்கின்றது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா கடந்த இருவாரங்களில் இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கென 120 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்திருப்பதுடன், இலங்கையின் பால் பொருள் உற்பத்திற்கு 27 மில்லியன் டொலர்களையும், பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு 5.75 மில்லியன் டொலர்களையும் வழங்கியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வருங்காலங்களில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்கும், உணவுப்பாதுகாப்பு நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும் பொதுச்சுகாதாரசேவையை மேம்படுத்துவதற்கும் அவசியமான உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என்றும், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கான இலங்கையின் தீர்மானத்தைத் தாம் வலுவாக ஆதரிப்பதாகவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM