கொள்கைகளுக்கேற்ப இலங்கைக்கு உதவ முடியும் ; சர்வதேச நாணய நிதியக்குழு தெரிவிப்பு

Published By: T. Saranya

25 Jun, 2022 | 12:08 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு, தமது கொள்கைகளுக்கு ஏற்ப இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டுக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருந்து, பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு உதவக் கூடிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. இக்குழு தனது முதலாவது சந்திப்பினை நாட்டுக்கு விஜயம் செய்த அன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முன்னெடுத்திருந்தது. எனினும் இதன் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையிலேயே இக்குழு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியது. இந்த சந்திப்பின் போதே, தமது கொள்கைகளுக்கமைய இலங்கைக்கு உதவ முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு வார காலம் இந்நாட்டில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நிறைவேற்று பணிக்குழாம் மட்டத்திலான உடன்படிக்கையை எட்டுவது தொடர்பாகவும் மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்கின்றது.  

இக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சு, மத்திய வங்கி ஆளுனர் மற்றும் ஏனைய பொருளாதார அதிகாரிகள், நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விளக்கமளித்தனர்.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விரிவாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி , இக்கட்டான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவுவது தொடர்பில் பிரதிநிதிகள் குழுவுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட செயற்பாட்டுத் தலைவர் பீட்டர் ப்ரூயர், செயற்பாட்டுத் தலைவர் மொசாஹிரோ நொசாஹி, வதிவிடப் பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் ஃபெரிதானு செட்யாவான்,  ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ஆன் மெரி குல்டே,  சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சீ. அமரசேகர, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, பிரதி நிதிச் செயலாளர் எம்.எஸ்.எஸ். சமன் பெர்னாண்டோ, பிரதி ஆளுநர் டி.எம்.ஜெ.வை.பி.பெர்னாண்டோ மற்றும் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை...

2023-03-23 16:08:45
news-image

அரசதுறை வியாபாரத்தில் ஈடுபட்டதால் மகாவலி போன்ற...

2023-03-23 16:06:04
news-image

அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு நிலையான...

2023-03-23 16:00:04
news-image

மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக ஜனாதிபதி...

2023-03-23 15:16:05
news-image

காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்....! வைத்தியர்...

2023-03-23 16:52:20
news-image

கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...

2023-03-23 17:24:22
news-image

20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி :...

2023-03-23 16:37:54
news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01