(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவரை எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று (24) அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ச.தொ.ச. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொச செயற்பாட்டு பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட மொஹமட் சாகீர் ஆகியோரையே இவ்வாறு நீதிமன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட குறித்த மூவருக்கும் எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு கடந்த மே 30 ஆம் திகதி ஐந்து வழக்குகளை தாக்கல் செய்தது.
பிரதிவாதிகள் மூவருக்கும் எதிராக கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 5 வழக்குகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். ( 2021, மார்ச் 26 இல் 3 வழக்குகளில் இருந்தும், 2022 ஜனவரி 28 ஆம் திகதி இரு வழக்குகளில் இருந்தும் )
குறித்த வழக்குகளை தாக்கல் செய்ய இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் ஆணையாளர்கள் மூவரினதும் எழுத்து மூல அனுமதி பெறப்படவில்லை என்ற நிலையில், அவ்வழக்குகளை குற்றவியல் சட்டத்தின் 126 ஆவது அத்தியாயத்துக்கு அமைய மீள வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டில் இவ்வழக்குகளை மீளப் பெற்றுக்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அனுமதி கோரிய நிலையிலேயே, அவ்வழக்குகளை மீளப் பெற அனுமதித்து சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையிலேயே குறித்த 5 வழக்குகளும் கடந்த மே 30 ஆம் திகதி மீள மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது 49 சாட்சியாளர்களின் பட்டியலும், 9 ஆவணங்கலும் நீதிமன்றுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினரால் சான்றாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான 5 வருட காலப்பகுதியில் 153 சதொச ஊழியர்களை கடமைகளிலிருந்து விலக்கி, அரசியல் நடவடிக்கைகளில் இணைத்தமையினூடாக அரசுக்கு 4 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தை மையப்படுத்திய குற்றப் பத்திரிகையைக் கையளிப்பதற்காகவே நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு இன்று ( 24) அறிவித்தல் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM