(நா.தனுஜா)
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது முழுவதுமான அவசரகால மனிதாபிமான நெருக்கடியாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுமார் 200 வகையான அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், அடுத்துவரும் இரண்டு அல்லது மூன்று மாதகாலத்தில் மேலும் 163 வகையான அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அவற்றுக்கு மேலதிகமாக சத்திரசிகிச்சைகளுக்கு அவசியமான 2700 இற்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கும், 250 இற்கும் மேற்பட்ட பொதுவான ஆய்வுகூட உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு அவசியமான எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக பல வைத்தியசாலைகள் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளைப் பிற்போடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்தப் பொருளாதார நெருக்கடி முழுவதுமான மனிதாபிமான அவசரகால நெருக்கடியாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM