ரோயல் பார்க் படுகொலை விவகாரம் - ரத்ன தேரரால் சி.ஐ.டி.யில் முறைப்பாடு

Published By: T Yuwaraj

23 Jun, 2022 | 11:55 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி  ஜயமஹவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை மையப்படுத்தி இன்று (23) சி.ஐ.டி.யில்  முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

Articles Tagged Under: அத்துரலியே ரத்ன தேரர் | Virakesari.lk

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இந்த முறைப்பாட்டை இன்று முற்பகல் தாக்கல் செய்துள்ளார்.

ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30  ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய  இவோன் ஜொன்சன் எனும் யுவதியை அவர் அணிந்திருந்த காற்சட்டையைக் கொண்டு கழுத்தை நெரித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டினை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாக கொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ  கடந்த 2019 நவம்பர் 9 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார். 

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் அண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே 2019 நவம்பர் 9 அவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

 இது குறித்து முன்னாள் ஜனாதிபதி அண்மையில் ஊடக மொன்றுக்கு வழங்கிய செவ்வியில், குறித்த குற்றவாளியை விடுவிக்க தான் பணம் பெற்றதாக கூறப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மறுத்தார்.

எனினும் அவருக்கு மன்னிப்பளிக்க, அவரது குடும்பத்தாரை தன்னிடம் கூட்டி வந்து தொடர்ச்சியாக கோரிக்கை அளித்தவர் ரத்ன தேரர் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததுடன், குற்றவாளியின் குடும்பத்தினரிடமிருந்து பிரிதொரு தரப்பு பணம் பெற்றுள்ளதாகவும், கூறினார்.

 இந் நிலையிலேயே தனது பெயரையும் தொடர்புப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட  கருத்து குறித்து ரத்ன தேரர் முறைப்பாடளித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்கு தேவையான பணத்தை ஏன் வழங்காமல்...

2023-03-23 16:24:26
news-image

பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை...

2023-03-23 16:08:45
news-image

அரசதுறை வியாபாரத்தில் ஈடுபட்டதால் மகாவலி போன்ற...

2023-03-23 16:06:04
news-image

அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு நிலையான...

2023-03-23 16:00:04
news-image

மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக ஜனாதிபதி...

2023-03-23 15:16:05
news-image

காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்....! வைத்தியர்...

2023-03-23 16:52:20
news-image

கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...

2023-03-23 17:24:22
news-image

20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி :...

2023-03-23 16:37:54
news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51