நூல் விமர்சகர் சிறீ சிறீஸ்கந்தராசா எழுதிய “தராசு முனைகள்” நூல் வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் கடந்த 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கொழும்புத்துறை சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற விழாவில் பிரதியை நூலாசிரியருடன் ஜே 62 கிராம அலுவலர் கீ. சேந்தன் வழங்கி வைத்தார்.

இதன்போது பாடகர் குணா குணசீலன் சோமு தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்ததுடன் நிகழ்ச்சி தலைவர் யாழ் இலக்கிய குவிய அமைப்பாளர் வேலணையூர் தாஸ், யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஜோன்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
