கோட்டா - ரணில் மோதல் உக்கிரம் : பிரதமர் பிரேரித்த 3 பேருக்கு இதுவரை அனுமதியில்லை !

Published By: Digital Desk 4

20 Jun, 2022 | 10:00 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை உக்கிரமடைந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.

அதன் பிரகாரம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 முக்கிய பதவிகள் தொடர்பில் பிரேரித்த மூன்று பெயர்களுக்கு இதுவரை ஜனாதிபதி அனுமதியளிக்காமல் இருப்பதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு தினேஷ் வீரக்கொடியையும்,  மக்கள் வங்கி தலைவரான சட்டத்தரணி நிசங்க நாணயயக்காரவையும்,  இலங்கை வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரோனால்ட் பெரேராவையும் நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது.

எனினும் அம்மூன்று பதவிகள் தொடர்பிலும் இதுவரை அந்த பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சு பதவியில் கடமையாற்றும் நிலையில் அவரின் கீழான நிறுவனங்களில் எந்த நியமனங்களையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு  முதித்த பீரிஸை தலைவராக நியமிக்கவும் பெரும் கஷ்டப்படவேண்டிய நிலை பிரதமருக்கு ஏற்பட்டதாகவும்  குறித்த தகவல்கள் தெரிவித்தன.

 எவ்வாறாயினும் தற்போதைய மத்திய வங்கி ஆளுநரின் பதவி எதிர்வரும் 30 ஆம் திகதி நீடிக்கப்பட வேண்டிய நிலையில், பிரதமரின் எந்த  பிரேரிப்புக்களையும் ஜனாதிபதி கணக்கில் கொள்ளாது செயற்படுவதானது, இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளை மேலும் அதிகரிக்கும் என அரசாங்க தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54