சனத் நிஷாந்தவின் சகோதரர்  கைது - விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Published By: Digital Desk 4

20 Jun, 2022 | 08:41 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

சிலாபம் – ஆராச்சிக்கட்டு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்தவின் சகோதரர் உள்ளிட்ட மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின்  பொது ஜன பெரமுன  உறுப்பினரான 38 வயதான ஜகத் சமந்த எனும்  பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் சகோதரர்,  சமீர மதுசங்க,  ஏ.ஏ. தம்மிக  ஆகியோரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று ( 20) சிலாபம் நீதிவான்  அனுர இந்ரஜித் புத்ததாஸ முன்னிலையில் அவர்கள் ஆஜர் செய்யப்பட்ட போது குறித்த மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க  நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37