சனத் நிஷாந்தவின் சகோதரர்  கைது - விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Published By: Digital Desk 4

20 Jun, 2022 | 08:41 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

சிலாபம் – ஆராச்சிக்கட்டு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்தவின் சகோதரர் உள்ளிட்ட மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின்  பொது ஜன பெரமுன  உறுப்பினரான 38 வயதான ஜகத் சமந்த எனும்  பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் சகோதரர்,  சமீர மதுசங்க,  ஏ.ஏ. தம்மிக  ஆகியோரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று ( 20) சிலாபம் நீதிவான்  அனுர இந்ரஜித் புத்ததாஸ முன்னிலையில் அவர்கள் ஆஜர் செய்யப்பட்ட போது குறித்த மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க  நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43