(எம்.மனோசித்ரா)
தமது அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பல மணி நேரங்களை செலவிடும் மக்களின் விரக்தியை பாதுகாப்பு துறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு - விசுவமடு பிரதேசத்தில் 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றுக்கு அருகில் இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரால் வானை நோக்கி துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே இந்த சம்பவத்தை மேற்கோற்காட்டி செய்துள்ள டுவிட்டர் பதிவில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில் , 'எரிபொருள் வரிசைகளில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருடன் தொடர்புடைய வன்முறையின் படங்கள் சிக்கலுக்குரியவை.
நீண்ட வரிசையில் பல மணிநேரங்களைச் செலவிடும் மக்களின் விரக்தியைப் புரிந்துகொள்ள பாதுகாப்புத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பு துறையினர் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தினால் அது குறித்து விசாரணை நடத்துமாறு உரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM