(எம்.மனோசித்ரா)
உணவு பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டு இராணுவத்தினால் பசுமை விவசாய வழிகாட்டல் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள தரிசு அல்லது கைவிடப்பட்ட அரச காணிகள் உள்ளடங்களான 1500 ஏக்கர்களில் விவசாயம் மேற்கொண்டு இலங்கை உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தை மேம்படுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூலை மாத தொடக்கத்தில் இவ் அவசர செயற்த்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே தலைமையில், பிரதிப் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய இத் திட்டத்தின் முகாமைத்துவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ வழங்கள் தளபதி மேஜர் ஜெனரல் இந்துசமரகோன், தலைமை களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன, உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க, பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, வேளாண்மை மற்றும் கால்நடைகள் பணிப்பாளர், நடவடிக்கை பணிப்பக பணிப்பாளர், ஊடகப் பணிப்பாளர், மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் பணிப்பாளர், ஆராய்ச்சி கருத்து ரூ கோட்பாடு பணிப்பாளர், மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளடங்குவர்.
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத்கொடிதுவாக்கு திட்டத்தையும் மேற்பார்வையிட உள்ளார்.
இக்குழுவின் ஆரம்ப அமர்வில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே புதிய குழுவிற்கு தேசிய முயற்சியின் நோக்கம் மற்றும் தேசிய இலக்குகளை அடைய விவசாயத் துறையுடன் இராணுவம் எவ்வாறு கைகோர்ப்பது என்பது பற்றி விளக்கியதுடன் எதிர்காலத்தில் உணவு வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க , கைவிடப்பட்ட நிலங்களில் உடனடி பயிர்ச்செய்கை மூலம் உணவு உற்பத்தி செயல்முறையைப் பெருக்குவது குறித்து விளக்கினார்.
முதற்கட்டமாக, நாடளாவிய ரீதியில் உள்ள இராணுவத்தினர் விவசாய நிபுணர்கள், விவசாய அதிகாரிகள் மற்றும் இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணியகத்தின் அனுபவம்வாய்ந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, தெரிவு செய்யப்பட்ட விதை வகைகளை பயிரிடுவதற்கு அவசியமான களையெடுத்தல், உழுதல் மற்றும் பாத்திகளை தயார் செய்தல் மூலம் அந்த அரச நிலங்களில் தரை மண்ணை தயார் செய்வர்.
அத்தோடு ஏற்கனவே இராணுவத்தால் 16 பண்ணைகள், மற்றும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் 6 பட்டாலியன்கள் நாடு முழுவதும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அத்தோடு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களும் படைப்பிரிவுகளும் தேசத்தின் பாதுகாவலர்களாக, கைவிடப்பட்ட அரச நிலங்கள் மற்றும் நெல் வயல்களைப் பயன்படுத்துவதற்கான திறனை தற்போழுது ஆராய்கின்றன.
தெரிவு செய்யப்பட்ட காணிகளில் பூர்வாங்க வேலைகளை ஆரம்பிக்கும் முன்னர், அந்தந்த ஆளுநர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நெருக்கமான ஆலோசனையுடன் பிராந்திய மட்டத்தில் அரச காணிகளை அடையாளம் காணப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM