வாகனங்களுக்கு எரி‍பொருளை பெற வரிசையில் காத்திருப்பவர்களுக்கான விசேட வேண்டுகோள் 

Published By: Digital Desk 5

17 Jun, 2022 | 11:49 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

எரி‍பொருள் நிரப்பு நி‍லையமொன்றில் 220 வாகனங்களுக்கு மேல் வரிசைகளில் இருபத்தில் அர்த்தமில்லை. எரிபொருள் பவுசரால்  220 வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்க முடியும்.

ஆகவே, அதற்கு மேல் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வாகன வரிசைகளை உருவாக்க வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, வரிசையில் நிற்கும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் எரிபொருளை வழங்க முடியாது எனவும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நின்றுகொண்டு வீணாக நேரத்தை செலவிடாது இருக்கும்படியும் அவர் மேலும் கேட்டுக்ககொண்டார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

"எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் ஒரு பவுசரில் சுமார் 6,600 லீற்றர் எரிபொருள் இருக்கிறது.  அது  220 வாகனங்களுக்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும். 

ஆகவே, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக ஒரே இடத்தில் நின்று காலத்தை செலவிடுவதில் அர்த்தமில்லை.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு குறித்தவொரு  நேரத்தில் ஒரு பவுசரை மட்டுமே அனுப்ப முடியும் மேலும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டால் அன்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் பவுசர்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03