இசையமைப்பாளரும், கதாநாயகனுமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படத்திற்கு 'வள்ளி மயில்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வள்ளி மயில்'. இதில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஃபரியா அப்துல்லா நடிக்கிறார். இவர்களுடன் மூத்த நடிகர்கள் பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி, சுனில், நடிகைகள் கனி அகத்தியன், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஜய் கே சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, டி இமான் இசையமைக்கிறார். பீரியட் ஃபிலிமாக தயாராகிவரும் இந்த திரைப்படத்தை நல்லுசாமி ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில் 'வள்ளி மயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் சுசீந்திரன், நாயகன் விஜய் அண்டனி, நாயகி ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட படக்குழுவினர் பங்குபற்றினர்.
படத்தின் நாயகன் விஜய் அண்டனி பேசுகையில், '' வள்ளி திருமணம் என்ற மேடை நாடகத்தைப் பின்னணியாகக் கொண்டு, 1980-களில் நடைபெறுவது போல் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பாளராக இருந்தாலும் காட்சிகளை நிதானமாகவும், ரசனையாக படமாக்குகிறார். அவரிடமிருந்து பொறுமையுடன் படைப்பை எப்படி உருவாக்குவது? என்பதனை கற்று வருகிறேன். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள் அனைவரின் திறமையையும் கண்டு வியந்திருக்கிறேன். இயக்குநர் சுசீந்திரனுடன் பணியாற்றுவது மறக்க இயலாத அனுபவமாக இருக்கிறது.'' என்றார்.
முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன், ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டிற்காக விழா எடுத்ததை திரையுலக வணிகர்கள் வரவேற்றிருக்கிறார்கள். ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் அன்டனி, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா என மூவர் மட்டுமே இடம் பெற்றிருப்பதாலும், இயக்குநர் சுசீந்தரனின் படைப்பு என்பதாலும், கொமர்ஷல் நாயகன் விஜய் அண்டனியின் படம் என்பதாலும், 'வள்ளி மயில்' படத்திற்கு வழக்கமான அளவை விட கூடுதலான வரவேற்பு கிடைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM