(எம்.மனோசித்ரா)
இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடுமாயின் அவற்றை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்.
மின்சக்தி துறையை அதானி நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதிக்கு அண்மித்த நாட்களில் இலங்கை மின்சாரசபையின் தலைவர் எம்.எம்.சி.பேர்னாண்டோவினால் , அப்போதைய திறைசேறி செயலாளர் சஜித் ஆட்டிகலவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் , அதானி என்ற இந்திய நிறுவனத்திற்கு மன்னார் வலயத்தில் 500 மெகா வோல்ட் கற்றுமின் சக்தியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அதானி நிறுவனத்தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்து விமானத்தின் மூலம் இந்த பிரதேசத்தை கண்காணித்ததாக செய்திகள் வெளியாகின.
இதன் போது அவர்களுக்கு 6000 மெகாவோல்ட் சூரிய மற்றும் காற்று மின்சக்தி தேவைப்படுவதாக அப்போதைய அரசாங்கமும் நிறுவனங்களும் தெரிவித்தன.
ஆனால் இலங்கையில் நாளாந்த மின் தேவை 2500 மெகா வோல்ட் மாத்திரமேயாகும். அதானி என்பது தனியார் நிறுவனமொன்றாகும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு இவ்விடயத்தில் இரு அரசாங்கங்கள் தலையிட முடியும் என்பது கேள்விக்குரியதாகும்.
இது தொடர்பில் மின்சாரசபை தலைவர் கோப்குழுவில் தெரிவித்த கருத்தினை தற்போது வாபஸ் பெற்றுள்ள போதிலும் , அவர் திறைசேறி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த மார்ச் 12 ஆம் திகதி அதானி நிறுவனம், இலங்கை மின்சாரசபை, முதலீட்டுசபை, நிதி அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் 500 மெகா வோல்ட் மின் குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அதானி நிறுவனம் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதற்கு உத்தியோகபூர்வ சான்றுகள் உள்ளனவா? மின்சாரசபை தலைவரின் கருத்தை ஜனாதிபதி மறுத்துள்ளார்.
அவ்வாறெனில் பிரதமரா இந்த ஆலோசனையை வழங்கியது? மின்சாரசபை சட்டத்தின் பிரகாரம் பிரதமருக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கும் அதிகாரம் கிடையாது. அமைச்சரவை அனுமதி உள்ளது என்று கூறப்படுவது இதற்கு பதில் அல்ல. காரணம் சட்டத்திற்கு முரணாக அமைச்சரவைக்கு செயற்பட முடியாது.
எனவே மன்னால் வலயத்தின் மின்சக்தி துறையை முழுமையாக அதானி தனியார் நிறுவனத்திற்கு வழங்கி நாட்டின் இறையான்மை காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மின்சாரசபை சட்டத்தின் மூலம் , அதானி நிறுவனத்திற்கு இதனை வழங்குவதில் அரச தரப்பில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின் ஏனைய தரப்பினர் ஊடாக வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு மத்தியில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளை , இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுமாயின் அவற்றை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். மின்சக்தி துறையை அதானி நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM