நாட்டின் தற்போதைய எரிபொருள் நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோரை பதிவு செய்து அவர்களுக்கு உத்தரவாதமான வாராந்த ஒதுக்கீட்டை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது
1) - தடையில்லா மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் இருக்கும் வரை, எரிபொருள் வரிசை சாத்தியமற்றது.
நிதிப்பிரச்சினைகள் உள்ள நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வாரத்திற்கு நிர்வகிக்க எரிபொருளை இறக்குமதி செய்கிறது, ஆனால் சில நுகர்வோர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்காக ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக எரிபொருளை சேகரிக்கின்றனர்.
2) டீசல், உலை எண்ணெய் குதம் ஆகியவற்றிற்கு 24 மணி நேர மின் விநியோகத்திற்கு கூடுதலாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாதந்தோறும் செலவாகிறது.
எரிவாயு பற்றாக்குறையால் மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த மாதாந்திர எரிபொருள் கட்டணம் தற்போது 550 மில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது.
3) நிதி நிலைமையை வலுப்படுத்தி, 24 மணி நேர மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகத்தை மீட்டெடுக்கும் வரை, நுகர்வோர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவு செய்து அவர்களுக்கு உத்தரவாதமான வாராந்திர ஒதுக்கீட்டை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஜூலை முதல் வாரத்தில் இது நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM