சிறார்களின் மந்தபோசனை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் - இம்தியாஸ் பாகீர் மாக்கார்

Published By: Vishnu

12 Jun, 2022 | 12:52 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் சுமார் 50 000 இற்கும் அதிகமான 5 வயதிலும் குறைந்த சிறுவர்கள் மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி , அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஐக்கிய நாடுகள் சபை தொடர்பில் இலங்கையின் பட்டினி மற்றும் சிறுவர்களின் மந்த போசனை தொடர்பில் தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டு மக்கள் இன்று கண்ணீருடனும் நம்பிக்கையின்றியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சுமார் 50 000 இற்கும் அதிகமான 5 வயதிலும் குறைந்த சிறுவர்கள் மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மீளக்கட்டியெழுப்ப முடியாத நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கான எந்தவொரு தீர்வும் அரசாங்கத்திடம் இல்லை. ஜப்பான் எம்முடன் நம்புறவில் இல்லை.

இதற்கான காரணம் தவறான தீர்மானங்களே ஆகும். நாட்டில் பின்பற்றப்படும் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும். காரணம் உள்ளக ஜனநாயகம் அற்ற கட்சிகளே தற்போது காணப்படுகின்றன. தேர்தல்களின் போது மக்கள் சரியான தெரிவுகளில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32