(எம்.மனோசித்ரா)
இலங்கையில் சுமார் 50 000 இற்கும் அதிகமான 5 வயதிலும் குறைந்த சிறுவர்கள் மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி , அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஐக்கிய நாடுகள் சபை தொடர்பில் இலங்கையின் பட்டினி மற்றும் சிறுவர்களின் மந்த போசனை தொடர்பில் தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
நாட்டு மக்கள் இன்று கண்ணீருடனும் நம்பிக்கையின்றியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சுமார் 50 000 இற்கும் அதிகமான 5 வயதிலும் குறைந்த சிறுவர்கள் மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
மீளக்கட்டியெழுப்ப முடியாத நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கான எந்தவொரு தீர்வும் அரசாங்கத்திடம் இல்லை. ஜப்பான் எம்முடன் நம்புறவில் இல்லை.
இதற்கான காரணம் தவறான தீர்மானங்களே ஆகும். நாட்டில் பின்பற்றப்படும் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும். காரணம் உள்ளக ஜனநாயகம் அற்ற கட்சிகளே தற்போது காணப்படுகின்றன. தேர்தல்களின் போது மக்கள் சரியான தெரிவுகளில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM