இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் சந்தி ஹைபொரஸ்ட் பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து நேற்று (09) மாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் மாகுடுகலையை சேர்ந்த 26 வயதுடைய ஞானபீட சமன்குமார என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் காட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹைபொரஸ்ட் மாகுடுகலை தோட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இராகலையிலிருந்து புரூக்சைட் சந்தி ஊடாக மாகுடுகலை தோட்டத்தை நோக்கி பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் சில்வர்கண்டி தோட்டத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் பயணித்த வேளையில் ஹைபொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலையை நோக்கி பயணித்த லொறி ஒன்றில் உந்துருளி மோதுண்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் லொறியில் மோதுண்ட நிலையில் வீசி எறியப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த இளைஞர்களை சில்வர்கண்டி தோட்ட பொது மக்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM