( எம்.எப்.எம்.பஸீர்)
அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தொடர்ந்து, கடந்த மே 9 ஆம் திகதி நாடெங்கும் பதிவான வன்முறைகளில், கொழும்பு 10, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் - பஞ்சிகாவத்தை பகுதியில் வைத்து உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவரை தாக்கி, அவர்களது வாகனங்களை சேதப்படுத்தி, அதற்கு தீ வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான சம்பவம் குறித்து மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது, வன்முறையாளர்கள் பொலிஸ் அத்தியட்சரின் கடமை நேர துப்பாக்கியை கொள்ளையடித்து சென்றுள்ளமை தொடர்பிலான தகவல்கள் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் புதன்கிழமை ( 8) சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 வயது இளைஞன் ஒருவரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.
புறக்கோட்டை, கொழும்பு 11, லக்ஷன வீட்டுத் தொகுதியை சேர்ந்த குறித்த இளைஞனின் பொறுப்பில் இருந்து, தாக்குதலின் போது கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கடமை நேர துப்பாக்கியையும் சி.ஐ.டி.யினர் மீட்டுள்ளனர்.
ப்ரவ்னின் ரக கைத்துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்களும், சி.ஐ.டி.யினரால் மீட்க்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞரை புதன்கிழமை ( 8) மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் சி.ஐ.டி.யினர் ஆஜர் செய்ததை அடுத்து அவரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த விவகாரத்தில், விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டி.யினர் அச்சம்பவம் தொடர்பில் கடந்த மே 22 ஆம் திக்தி மருதானை பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, பொலிஸ் அத்தியட்சரின் காரிலிருந்து கழற்றி எடுக்கப்பட்டதாக நம்பப்படும் உதிரிப் பாகம் ஒன்றினை ( பபர் )சி.ஐ.டி.யினர் கைப்பற்றியிருந்தனர்.
மே 9 ஆம் திகதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் ( டி.ஐ.ஜி.), பொலிஸ் அத்தியட்சர் ( எஸ்.பி.) ஒருவரும் பயணித்த பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான இரு கார்கள் , பஞ்சிகாவத்தை சுற்று வட்டம் அருகே ஒன்றுகூடியிருந்தோரால் நிறுத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அதில் பயணித்த குறித்த இரு உயர் பொலிஸ் அதிகாரிகளும் தாக்கப்பட்டுள்ளதுடன், அதில் காயமடைந்த பொலிஸ் அத்தியட்சர் இன்னும் பொலிஸ் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார். இவ்வாறான நிலையில், வாகனங்களை சேதப்படுத்திய பின்னர், அங்கிருந்த வன்முறையாளர்கள், வாகனத்தின் பாகங்களை கழற்றி எடுத்துவிட்டு எஞ்சிய பகுதிக்கு தீ வைத்துள்ளனர்.
இது குறித்து மாளிகாவத்தை பொலிசாரும் கொழும்பு மத்தி வலய குற்றத் தடுப்புப் பிரிவும் விசாரணைகளை நடாத்தி வந்த நிலையிலேயே பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய அவ்விசாரணைகள் சி.ஐ.டி.க்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM