இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள இலங்கை மின்சார சபை பொறியியல் தொழிற்சங்கம் இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர் தொழிற்சங்க போராட்டம் குறித்த முடிவை எடுத்ததாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
உரியநடைமுறைகளை பின்பற்றாமல் மன்னார் பூநகரியில் அதானி குழுமம் தனது திட்டங்களை முன்னெடுக்க உதவும் வகையில் மின்சார திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அமைச்சருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சருடன் நாங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சர் தீர்மானித்துள்ளார் என தொழிற்சங்க பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீhமானித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM