(எம்.மனோசித்ரா)
பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு, அவர்களின் வாகனங்களுக்கு தீவைத்த சந்தேகநபரொருவர் பொலிஸாரின் உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பு - பஞ்சிகாவத்தை சந்தியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அன்றைய தினம் குறித்த பகுதியில் சென்று கொண்டிருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி , அவர்களது உத்தியோகபூர்வ வாகனங்களிலுள்ள உதிரப்பாகங்களை அகற்றி வாகனத்திற்கு தீமூட்டியமை தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பிரதேசத்திலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு - 11 , லக்ஷசெவன குடியிருப்பு பகுதியில் 18 வயதுடைய நபராவார். இவரிடமிருந்து பொலிஸாருக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ துப்பாக்கியொன்றும் , அதற்கு பயன்படுத்தப்படும் 20 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக தண்டனை சட்டக்கோவை, பொதுசொத்துக்கள் சட்டம், துப்பாக்கிக் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM