பகைத்துக்கொண்ட மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகளை மீளப் பெற அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் - மரிக்கார்

Published By: Digital Desk 5

08 Jun, 2022 | 10:05 PM
image

(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)

இனவாத கொள்கையினால் பகைத்துக்கொண்ட மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகளை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருளை கொள்வனவு செய்ய முடிந்தால் எரிபொருளுக்காக செலவு செய்யும் டொலரை பிறிதொரு தேவைக்கு பயன்படுத்த முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர்கூறுகையில் ,

பாராளுமன்ற கூட்டத்தொடரில் இல்லை,முடியாது,தீவிரமடையும்,பொருத்துக்கொள்ள வேண்டும் என்ற வார்த்தைகளை மாத்திரமே கேட்க முடிகிறது.

வீட்டில் இருந்தாலும்,வெளியில் சென்றாலும் நெருக்கடி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.பிரச்சினைகளுக்கு தீர்வையே மக்கள் கோருகிறார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் போது சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்  என எதிர்பார்த்தோம்.

ஆனால் தற்போது எந்த நாடும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.எனவே இனவாத பேச்சுக்களினால் பகைத்துக்கொண்ட மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை  பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

மருந்து தட்டுப்பாட்டை வெற்றிக்கொள்ள அரசாங்க மருந்தக கூட்டுத்தாபனம் வசம் உள்ள   டொலர்  பயன்படுத்தப்பட வேண்டும்.

எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் மக்கள் அமைதிடைவார்கள்.

சுற்றுலாத்துறை அபிவிருத்தியடையும்.ஆகவே மூக்கில் அழுவதை நிறுத்தி விட்டு சிறந்த திட்டங்களை முறையாக செயற்படுத்துங்கள்.

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் பொது மக்களின் எண்ணிக்கை குறைவடைந்தவுடன் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் முடிவடைந்து விட்டது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் மனங்களில் உள்ளது.மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிடின் இரண்டாவது சுனாமி அலைபோல் பாரிய தாக்கத்தை எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் இனப்படுகொலை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:13:36
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38