உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாகச் சந்தேகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்த கண்டியைச் சேர்ந்த முகம்மது பாறுக் முகம்மது ஹிலாமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். என் .அப்துல்லாஹ் இன்று புதன்கிழமை (08) பத்து இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணை, வெளிநாடு செல்லத்தடை என்ற நிபந்தனையில் பிணையில் விடுவித்துள்ளார்.
ஸஹ்ரானின் குழுவைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2019.5.4 ஆம் திகதி கண்டியில் வைத்து முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் சி.ஜ.டி.யினரால் கைது செய்யப்பட்டுத் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு இவருக்கு எதிராகக் கண்டி மேல் நீதிமன்றத்திலும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கண்டி மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதேவேளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இவர் சார்பாகச் சட்டத்தரணி இஸ்மாயீல் உவைஸுல் ரஹ்மான் ஆஜராகி இவரைப் பிணையில் விடுவிப்பதற்கான முன் நகர்த்தல் பத்திரம் கடந்த திங்கட்கிழமை கொண்டுவரப்பட்டு இன்று புதன்கிழமை (08) வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்ற நீதிபதி நீதிபதி; என்.எம். என் . அப்துல்லாஹ் முன்னிலையில் எடுக்கப்பட்டது.
இதன் போது சட்டமா அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவந்த அரச சட்டவாதி எம்.ஏ.எம். லாபீர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்குப் பிணை வழங்கச் சம்மதம் தெரிவித்ததையடுத்து, பத்து இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணை, வெளிநாடு செல்லத்தடை, ஆகிய நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM