உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான கண்டியைச் சேர்ந்த நபருக்குப் பிணை

Published By: Digital Desk 4

08 Jun, 2022 | 08:48 PM
image

உயிர்த்த  ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாகச் சந்தேகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்த கண்டியைச் சேர்ந்த முகம்மது பாறுக் முகம்மது ஹிலாமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். என் .அப்துல்லாஹ் இன்று புதன்கிழமை (08)  பத்து இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணை, வெளிநாடு செல்லத்தடை என்ற நிபந்தனையில் பிணையில் விடுவித்துள்ளார். 

ஸஹ்ரானின் குழுவைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2019.5.4 ஆம் திகதி கண்டியில் வைத்து முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் சி.ஜ.டி.யினரால் கைது செய்யப்பட்டுத் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு இவருக்கு எதிராகக் கண்டி மேல் நீதிமன்றத்திலும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் கண்டி மேல் நீதிமன்றத்தில்  தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதேவேளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இவர் சார்பாகச் சட்டத்தரணி இஸ்மாயீல்  உவைஸுல் ரஹ்மான் ஆஜராகி இவரைப் பிணையில் விடுவிப்பதற்கான முன் நகர்த்தல் பத்திரம்  கடந்த திங்கட்கிழமை கொண்டுவரப்பட்டு இன்று புதன்கிழமை (08) வழக்கு விசாரணைக்காக  மேல் நீதிமன்ற நீதிபதி நீதிபதி; என்.எம். என் . அப்துல்லாஹ் முன்னிலையில் எடுக்கப்பட்டது. 

இதன் போது சட்டமா அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவந்த அரச சட்டவாதி எம்.ஏ.எம். லாபீர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்குப் பிணை வழங்கச் சம்மதம் தெரிவித்ததையடுத்து, பத்து இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணை, வெளிநாடு செல்லத்தடை, ஆகிய நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47