ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிப்பு

Published By: Digital Desk 3

07 Jun, 2022 | 04:59 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில்,  குற்றவாளியாக காணப்பட்ட முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்சன் ராமநயக்கவுக்கு  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் நேற்று ( 7) தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில்  குற்றத்தை ஒப்புக்கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  கடந்த மார்ச் 25 ஆம் திகதி உயர் நீதிமன்றுக்கு  அறிவித்திருந்த நிலையிலேயே உயர் நீதிமன்றம்  இந்த தீர்ப்பை நேற்று அறிவித்தது.

 உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அளுவிஹார தலைமையிலான எல்.ரி.பி. தெஹிதெனிய மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் போது,   இன்று (7) சிறைச்சாலை அதிகாரிகளால் ரஞ்சன் ராமநாயக்க   உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

முன்னதாக இந்த 2 ஆவது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் தான் நிரபராதி என ஏற்கனவே குற்றச்சாட்டு கையளிக்கப்பட்ட போது ரஞ்சன் ராமநாயக்க அறிவித்திருந்தார்.

 எனினும்  கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரஞ்சன் ராமநாயக்கவுக்காக மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட,  இவ்வழக்கில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு தனது சேவை பெறுநர் ஏற்கனவே நிரபராதி என தன் நிலைப்பாட்டை அறிவித்திருந்த நிலையில், அதனை மாற்றி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் குற்றவாளி என நிலைப்பாட்டினை முன் வைக்க அனுமதியளிக்குமாறு கோரினார்.

 இதனையடுத்து, நீதியரசர்கள் குழாம், குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை  திறந்த நீதிமன்றில் அழைத்து   அவரது சட்டத்தரணி முன் வைத்த விடயம் தொடர்பில் வினவியிருந்தது.

 அதற்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க,  இதற்கு முன்னர் தான் நிரபராதி என தன் நிலைப்பாட்டை மன்றுக்கு அறிவித்திருந்த போதும் அதனை வாபஸ் பெற்று முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு தான் குற்றவாளி என ஒப்புக்கொள்வதாக சிங்கள மொழியில் தெரிவித்திருந்தார்.

' கனம் நீதியரசர்களே, குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிரபராதி என நான் முன்னர் தெரிவித்தேன்.  எனினும் அந்த நிலைப்பாட்டை வாபஸ் பெற்று, குற்றவாளி எனும் எனது நிலைப்பாட்டை முன் வைக்க நான் அனுமதி கோருகிறேன்.  நான் தெரன தொலைக்கட்சியின் வாத பிட்டிய நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்தை மையப்படுத்தி இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.  நான் அந்த கருத்தை வெளிப்படுத்தும் போது, உண்மையில் உயர் நீதிமன்றை அவமதிக்கும் அல்லது கேவலப்படுத்தும் எந்த எண்ணமும் எனக்குள் இருக்கவில்லை.  எனினும் அந்த கருத்தால், உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு அவ்வாறான ஒரு எண்ணப்பாடு தோன்றி இருப்பின், எந்த நிபந்தனையும் இன்றி நான் எனது ஆழ்ந்த கவலைகளை பிரஸ்தாபிக்கின்றேன். ' என ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றில்  அப்போது குறிப்பிட்டிருந்தார்.

 இதனையடுத்து மன்றில் விஷேட கோரிக்கையினை முன் வைத்திருந்த  ரஞ்சனின் சட்டத்தரணி அனுர மெத்தேகொட, இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன் வைக்க கால அவகாசம் கோரியிருந்தார்.

 இதனையடுத்து சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் , இவ்வாறனதொரு நிலைமையில் பிரதிவாதிக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது அவ்விரண்டினையும் விதிக்க முடியும் எனவும், பொருத்தமான தீர்ப்பொன்றினை வழங்குமாறு தான் மன்றினை கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து  இந்த இவ்ழக்கில் எழுத்து மூல சமர்ப்பணங்கள் இருப்பின் மே 4 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதியரசர்கள், வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாது ஒத்தி வைத்தனர்.

இவ்வாறான நிலையிலேயே அவ்வழக்கின் தீர்ப்பு இன்று ( 7) அறிவிக்கப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு  அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பாராளுமன்றை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிக்க  நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் குழாம்  தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கருத்துக்களை மையப்படுத்தி  அப்போதைய உயர் நீதிமன்ற பதிவாளர் , ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றை அவமதித்தமை தொடர்பிலான இந்த 2 ஆவது முறைப்பாட்டினை செய்திருந்தார்.

இதற்கு முன்னர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பிலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 3 மாதங்கள் அவை நடவடிக்கையில் பங்குபற்றாமை காரணமாக அவர் பாராளுமன்ற உறுப்புரிமையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55