உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த வேண்டாம் - அமைச்சர் நளின் பெர்னாண்டோ

Published By: Digital Desk 4

07 Jun, 2022 | 01:38 PM
image

(எம்.மனோசித்ரா)

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை சடுதியாக அதிகரித்தமை தொடர்பில் லாப் நிறுவனத்திடம் விளக்கம் கோருமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்தோடு உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்து வீடுகளில் சேமிக்க வேண்டாம் என்றும் , இவ்வாறான செய்பாடுகளால் சந்தைகயில் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பினை வழமையைப் போன்று பேண முடியாது என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

திங்கட்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

மக்கள் தமக்கு தேவையான உணவு பொருட்களை தேவையானளவிற்கு கொள்வனவு செய்ய முடியும். அதனை விடுத்து அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்தால் அது சந்தைகளில் அத்தியாவசிய  பொருட்களின் வழமையான இருப்பினைப் பேணுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வழமையாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் அரிசி இறக்குமதி செய்யப்படும். எனினும் இவ்வாண்டு இப்போதே அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 6 - 7 மாதங்களுக்கு அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.

பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அனுமதியைக் கோர வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தளர்த்தப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் விலை அதிகரிப்பக்கள் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற என்பதை வினவும் அதிகாரம் நுகர்வோர் அதிகார சபைக்கு உண்டு. அதற்கமைய லாப் நிறுவனம் எந்த அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரித்தது என்பது குறித்து விளக்கம் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55