தனியார் பஸ் சேவைகள் 35 சதவீதமாக மட்டுப்படுத்தப்படும் - அகில இலங்கை தனியார் பஸ் சங்கம்

Published By: Vishnu

05 Jun, 2022 | 09:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடுதழுவிய ரீதியில் இன்றைய தனியார் பேரூந்துகள் 35 சதவீதம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படும்.

பேருந்து சேவை மட்டுப்பாட்டினால் பொதுபயணிகள் எதிர்க்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வலுசக்தி அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும் என அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பேரூந்து சேவை மட்டுப்பாடு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகத்தில் தனியார் பேரூந்துகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு வலுசக்தி அமைச்சிடம் பலமுறை உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுத்தோம்.

அரச பேரூந்துகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்கி நாடு தழுவிய ரீதியில் அரச பேரூந்து போக்குவரத்து சேவையினை முன்னெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

தனியார் பேருந்துகள் ஒரு பயணத்தை மேற்கொள்வதற்கு தேவையான டீசலை பெற்றுக்கொள்வது பெரும் போராட்டமாக உள்ளது.

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை நாடுதழுவிய ரீதியில் தனியார் பேரூந்து போக்குவரத்து சேவையினை இன்று முதல் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைய மன்னார், வவுனியா, கம்பஹா, தென்மாகாணம், கேகாலை, கண்டி, பொலன்னறுவை, பதுள்ளை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 10சதவீதம் தொடக்கம் 15 சதவீதமளவில் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.கொழும்பு மாவட்டத்தில் 25 சதவீதமளவில் பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

பெரும்பாலான பேரூந்துகள் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்படும்.

பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொது பயணிகள் எதிர்க்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வலுசக்தி அமைச்சு பொறுப்புக் கூற வேண்டும். எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் தனியார் பேரூந்து சேவையினை விரிபுப்படுத்திய வகையில் முன்னெடுக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி,...

2025-12-17 15:43:07
news-image

அனர்தகால உதவிகளை மக்களுக்கு சென்றடைவதை அரச...

2025-12-17 17:31:21
news-image

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமான நிகழ்வை...

2025-12-17 17:30:29
news-image

கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

2025-12-17 17:29:37
news-image

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

2025-12-17 17:18:26
news-image

கொத்மலை - ரம்பொடை பகுதியில் மீட்கப்பட்டது...

2025-12-17 17:28:57
news-image

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை நிர்வாகப்...

2025-12-17 17:11:28
news-image

அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன...

2025-12-17 17:01:21
news-image

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

2025-12-17 15:24:48
news-image

விபத்தில் சிக்கி தாயும் குழந்தையும் பரிதாபமாக...

2025-12-17 16:53:34
news-image

இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி...

2025-12-17 16:50:28
news-image

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில்...

2025-12-17 17:08:08