தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகினர்.

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கையை வெளியிட்டது.
இதன்படி வேட்புமனு தாக்கல் மே மாதம் 24ஆம் திகதியன்று தொடங்கியது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் மாதம் 1ஆம் திகதி அன்று நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற வெள்ளிக்கிழமையான நேற்று கடைசி நாளாகும்.

மேலும் இது தொடர்பாக. தமிழக தேர்தல் அதிகாரியும், தமிழக சட்டப்பேரவை செயலாளர் நாயகமுமான சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...
'' திமுகவை சேர்ந்த சு. கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன், கே. ஆர். என். ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த சி. வி. சண்முகம், ஆர். தர்மர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப. சிதம்பரம் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.'' என்றார்.
வெற்றிபெற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து திமுக மாநிலஙகளவை உறுப்பினர்கள், கட்சியில் வளரும் இளந்தலைவரான உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து ஆசி பெற்றனர்.
அதிமுகவில் சார்பில் போட்டியிட்ட வெற்றிபெற்றவர்கள் அதிமுகவின் இரட்டை தலைமைகளாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM