நீரிலிருந்து மீனவனின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்

Published By: Digital Desk 3

03 Jun, 2022 | 03:52 PM
image

தாய்லாந்தில் பாட்தலங் மாகாணத்தில் மீன் ஒன்று மீனவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த அரிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

நன்னீரில் ஸ்பியர்ஃபிஷிங் முறையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவரது தூண்டிலில் மீன்  சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் தொண்டைக்குள்  விழுந்துள்ளது.

5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது. 

ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர முடியவில்லை. தொண்டைக்கும், சுவாச குழிக்கும் இடையில் அந்த மீன் சிக்கி கொண்டது. இதனால், பிராணவாயு செல்லும் வழி அடைப்பட்டது. இதில் திணறி போன அந்த நபர் தொண்டையை இறுக பிடித்து கொண்டார்.

உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. 

மீன் சிக்கி இருந்த சரியான இடம் கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. 

இதுபற்றி வைத்தியசாலை அதிகாரி செர்ம்ஸ்ரீ பாத்தோம்பனிகிராட் கூறும்போது, 

நீரில் இருந்து துள்ளி குதித்து ஒருவரின் தொண்டையில் மீன் சிக்கிய சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.

இதற்கு முன் இதுபோன்ற விசயங்களை நான் கேள்விபட்டதே இல்லை. எங்களது நோயாளியின் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் வைத்தியர்கள் செயல்பட்டனர். அவரை காப்பாற்றி விட்டனர் என தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், தாய்லாந்தின் ஆவோ டான் கூ பீச்சில், நீச்சலில் ஈடுபட்டிருந்த சுற்றுலாவாசியான நொப்படோல் ஸ்ரீங்கம் என்பவரின் தொண்டையில் ஊசி மீன் ஒன்று குத்தியது. இதில், அவரது நிலைமை மோசமடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்