திருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியில் இன்று (03) சமையல் எரிவாயுக்காக அதிகாலை 4 மணி முதல் காத்திருந்த போதும் எரிவாயு வாகனமே அங்கு வராமையினால் வெறுங்கையுடன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பல மணி நேரம் காத்திருந்த போதும் எரிவாயு கிடைக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்து வீடு சென்றுள்ளனர். வேகாத வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் அதிகாலை முதல் மதியம் 12.30 மணி வரை காத்திருந்த தாய்மார்கள், வயோதிபர்கள் பெரும் கவலையுடன் வீடு திரும்பினர்.
சமையல் எரிவாயு குறித்த பகுதிக்கு கிடைக்கப் பெற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளதாக கவலை வெளியிடுகின்றனர்.
முள்ளிப்பொத்தானை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்டிய பகுதியில் கண்டி திருகோணமலை பிரதான வீதியின் அருகேயும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு கிடைக்காமல் வீடு திரும்பியதாகவும் முச்சக்கர வண்டிக்கு பணம் கொடுத்து பல கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் சமைப்பதற்கு விறகின்றி பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் அங்கு காத்திருந்த வயோதிபத் தாய் ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM