(நெவில் அன்தனி)
இந்தியாவின் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெறவுள்ள 61 ஆவது மாநிலங்களுக்கு இடையிலான சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 12 மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர்.
அழைப்பு போட்டியாளர்களாக பங்குபற்றும் இந்த 12 பேரும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற சிரேஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் சாதனை நிலைநாட்டிய ரொஷான் தம்மிக்க, முப்பாய்ச்சலில் சாதனை நிலைநாட்டிய சமல் குமாரசிறி ஆகிய இருவரும் தனிநபர் நிகழ்ச்சிகளில் பங்குபற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர் சங்கம்) தெரிவித்தது.
இதேவேளை, ஆண்களுக்கான 4 X 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் பெண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை பங்குபற்றவுள்ளது.
ஆண்களுக்கான 4 X 400 மீற்றர் தொடர் ஓட்ட அணியில் அருண தர்ஷன, இசுறு லக்ஷான், பபாசர நிக்கு, தினூக்க தேஷான், ஆர்.எம். ராஜகருண ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
பெணகளுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்ட அணியில் அமாஷா டி சில்வா, ருமேஷிக்கா ரத்நாயக்க, ஷெலிண்டா ஜென்சென், மேதானி ஜயமான்ன, லக்ஷிகா சுகந்தி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
மே மாதம் 10ஆம் திகதியிலிருந்:து 14ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்திய மாநிலங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியினர் எதிர்வரும் 9ஆம் திகதி சென்னை பயணமாகவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM