கிளிநொச்சி மாவட்டத்திற்கு புகையிரதமூடாக நேற்று 02-06-2022 கொண்டு வரப்பட்ட தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரண பொதிகள் இரவிரவாக பிரதேச செயலகங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் நேற்றைய தினம் 02.06.2022 கிளிநொச்சி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பிரதேச செயலகங்களுக்கு விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
புகையிரதத்தில் எடுத்துவரப்பட்ட உணவு பொதிகள் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இறக்கப்பட்டு நான்கு பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மாவட்டச்செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச்செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து பொதிகளை இறக்கி ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
4450 பொதிகளில் 222500 கிலோகிராம் அரிசியும் 50 பொதிகளில் 1 கிலோ கிராம் நிறையுடைய 750 பால்மா பைக்கற்றுக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவை பிரதேச செயலகங்களூடாக 20 000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 10900 பயனாளிகளுக்கும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 3720 பயனாளிகளுக்கும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 3380 பயனாளிகளுக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 2000 பயனாளிகளுக்குமாக மொத்தமாக 20000 பயனாளிகளுக்கு இவ் நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM