தமிழகத்தின் நிவாரணப்பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு விநியோகம் 

Published By: Digital Desk 5

03 Jun, 2022 | 11:04 AM
image

கிளிநொச்சி மாவட்டத்திற்கு புகையிரதமூடாக நேற்று 02-06-2022 கொண்டு வரப்பட்ட  தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரண பொதிகள் இரவிரவாக பிரதேச செயலகங்களுக்கு விநியோகிக்கும் பணிகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் நேற்றைய  தினம் 02.06.2022 கிளிநொச்சி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து  பிரதேச செயலகங்களுக்கு விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

புகையிரதத்தில் எடுத்துவரப்பட்ட உணவு பொதிகள் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இறக்கப்பட்டு நான்கு பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மாவட்டச்செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச்செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து பொதிகளை இறக்கி ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

4450 பொதிகளில் 222500 கிலோகிராம் அரிசியும் 50 பொதிகளில் 1 கிலோ கிராம் நிறையுடைய 750 பால்மா பைக்கற்றுக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவை பிரதேச செயலகங்களூடாக 20 000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 10900 பயனாளிகளுக்கும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 3720 பயனாளிகளுக்கும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 3380 பயனாளிகளுக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 2000 பயனாளிகளுக்குமாக மொத்தமாக 20000 பயனாளிகளுக்கு இவ் நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08