ரஷ்யாவுக்கு புறப்படவிருந்த விமானத்தின் பயணத்தை இறுதி நேரத்தில் இடைநிறுத்தி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

02 Jun, 2022 | 09:11 PM
image

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து மீண்டும் ரஷ்யாவுக்கு  புறப்படவிருந்த விமானம் ஒன்றின் பயணத்தை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து கட்டுநாயக்கவில் அது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய Aeroflot Airlines க்கு சொந்தமான  SU-288 என்ற இந்த விமானம் இன்று (02) காலை 10.10 மணியளவில் ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து புறப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

குறித்த விமானம்  இன்று பகல்12.50 மணிக்கு மீண்டும் மொஸ்கோவுக்கு புறப்படவிருந்தது.

இந்த விமானத்தில் பயணிப்பதற்காக 200க்கும் மேற்பட்ட பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான  நிலையத்துக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வு பிரிவு அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு கிடைக்கப்பெற்றது. 

இதன்படி குறித்த விமானம் பயணிப்பதை தடுக்குமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது

இதன்படி, விமானப் பயணம் இரத்துச் செய்யப்பட்டதுடன், விமானத்தில் செல்வதற்காக வந்திருந்த  பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய சுற்று வட்டார சுற்றுலா விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51