(எம்.எம்.சில்வெஸ்டர்)
இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 288,645 பேர் தமது கடவுசீட்டிற்கு விண்ணப்பித்து பெற்றுக்கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான பியூமி பண்டார தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டில் 382,506 கடவுச்சீட்டுகள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பியூமி பண்டார,
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியுள்ளதாகவும், இதனால் அதிகமானோர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரியில் 52,278 உம், பெப்ரவரியில் 55,381 உம், மார்ச்சில் 74,890 உம், ஏப்ரலில் 53,151 உம், மே மாதம் 52,945 ஆகிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், ஆயிரகணக்கானோர் கடவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வருவதனால் எமது அதிகாரிகள் கடமைகளை மேற்கொள்வதில் பாரிய சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும், முன்பதிவு செய்யாதவர்கள் தலைமை அலுவலகத்தைச் சுற்றி நாளாந்தம் பல கிலோமீற்றர் தூரம் வரிசையில் நிற்பதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நாளாந்தம் 1,500 க்கும் அதிகமானோர் சேவையாற்றி வருகின்றனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெறுவதாயின் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் மேற்கொள்ள முடியும்.
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு பத்தரமுல்லை, மாத்தறை, குருநாகல், கண்டி, வவுனியா ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM