(எம்.வை.எம். சியாம்)
மன்னார்- உயிலங்குளம் பகுதியில் மோட்டார் கார் ஒன்றில் பயணித்த ஐவர் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நேற்று (31) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயிலங்குளம் பகுதியில் மோட்டார் கார் ஒன்றில் பயணித்த 5 பேர் திடீர் உடல் நலக்குறைவினால் மன்னார்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.
உயிரிழந்தவர்கள் 26 , 34 வயதுடைய தலைமன்னார் மற்றும் பேசாளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இந்நிலையில், சடலங்கள் மீதான பிரதே பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்றது.
குறித்த நபர்கள் இருவரும் அதிக அளவில் மது அருந்தி உள்ளதாகவும் மற்றும் அதிக போதைப்பொருள் பாவனையே மரணத்திற்கான பிரதான காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனைய மூவரும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM