(இராஜதுரை ஹஷான்)
புகையிரத ஆசன முன்பதிவு கட்டணம் நாளைமறுதினம் முதல் (ஜூன் 01) வெவ்வேறு பிரிவுகளில் 30 சதவீதம் முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்.
புகையிரத திணைக்களம் எதிர்க்கொண்டுள்ள நட்டத்தை முகாமைத்துவம் செய்வதற்காகவே ஆசன பதிவு கட்டணத்தை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து ஏனைய சேவை கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் பயணிகள் புகையிரத சேவை கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
புகையிர சேவைக்காக நாளாந்தம் சுமார் 40 மில்லியன் ரூபா செலவாகுவதுடன்,நாளாந்த வருமானம் 15 மில்லியமான காணப்படுகிறது.
பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் வழமைக்கு மாறாக மேலதிகமாக புகையிரத சேவையினை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய புகையிரத திணைக்களம் எரிபொருளுக்கு மாத்திரம் நாளாந்தம் 30 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது.
நிதி நெருக்கடி நிலைமையினை கருத்திற்கொண்டு ஆசன பதிவு கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM