(இராஜதுரை ஹஷான்)
காசு கொடுத்தும் உரத்தை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. சிறுபோக விவசாயத்திற்கு உரம் வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க முடியாது.
பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்குவதற்கான பொறுப்பினை ஏற்க முடியும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புதிய அரசாங்கத்தில் விவசாயத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள காரணத்தினால் விரைவாக உரத்தை விநியோகிக்க முடியாது.
காசு கொடுத்து கூட உரத்தை பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை காணப்படுகிறது.உர இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளமை அதற்கு பிரதான காரணியாக உள்ளன.
இரசாயன உர நிறுவனத்திற்கு 23 மில்லியனும்,சேதன பசளை உற்பத்தி நிறுவனத்திற்கு 5000மில்லியனும் செலுத்தப்படவுள்ளதால் உரத்தை கொள்வனவு செய்வது சிக்கல் தன்மையில் உள்ளது.ஆகவே ஒரே நாளில் உரத்தை இறக்குமதி செய்ய முடியாது.
சிறுபோக விவசாய நடவடிக்கைக்கு உரம் விநியோகிப்பதற்கான பொறுப்பை ஏற்க முடியாது. பெரும்போக விவசாயத்திற்கான உர விநியோகத்திற்கான பொறுப்பினை ஏற்க முடியும்.விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதியை வழங்க விரும்பவில்லை என்றார்.
எரிபொருள் தட்டுப்பாடு,உரம் பற்றாக்குறை ஆகிய காரணிகளினால் சிறுபோக பயிர்ச்செய்கை 50 சதவீதத்தினால் குறைவடைவதால் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பிறகு அரிசி உற்பத்தி பாரிய விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என போராதனை பல்கலைக்கழகத்தில் விவசாய பீட சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM