கட்டுமானத்துறையில் 1.2 மில்லியன் தொழிலாளர்கள் தொழிலையிழக்கும் அபாயம்!

Published By: Digital Desk 5

28 May, 2022 | 03:27 PM
image

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 75 வீதமான தொழிலாளர்கள் தொழிலை  இழக்கும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் எம்.டி.பால் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் சுமார் 300,000 கட்டுமானத் தொழிலாளர்கள் மறைமுகமாக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறார்கள். 

இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1.2 மில்லியன் தொழிலாளர்கள் அடுத்த மாதத்திற்குள் தொழிலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் நாட்டில் தற்போது 90 வீதமான கட்டுமானப் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 800,000 முதல் 900,000 வரையிலான தொழிலாளர்கள் கட்டுமானத் துறையின் மூலம் நாட்டிற்கு நேரடியாகப் பங்களிப்பு செய்கின்றனர்.

பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23
news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12
news-image

தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை...

2025-02-19 20:24:54
news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18