யாழில் டெங்குக் காய்ச்சாலால் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் யாழில் ஒருவாரத்தில் டெங்கு காய்ச்சலால் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது-5) என்ற சிறுமியே இவ்வாறு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.
சிறுமிக்கு கடந்த 23 ஆம் திகதி மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பனடோல் மாத்திரை வழங்கப்பட்டதனால் ஒரளவு குணமடைந்துள்ளார்.
கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவிலில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிறுமிக்கு காய்ச்சலும் வாந்தியும் அதிகரித்ததால் மீண்டும் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலையைக் கருத்திற்கோண்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறுமி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது சிறுவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் டெங்கு காய்ச்சலினால் கடந்த சனிக்கிழமை (21) உயிரிழந்தார்.
காய்ச்சல் ஏற்பட்டால் நேரடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM