ரணில் ஜனாதிபதியாவார் ; ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வெளிப்படுத்தும் விடயம்

27 May, 2022 | 01:56 PM
image

நமது விசேட நிருபர்

ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் உருவாகும் வல்லமை கொண்டவர் என்று  நான் முன்னர் கூறினேன்.  அது இன்று நடந்து கொண்டிருக்கின்றது  என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்திருக்கின்றார்.

அரசியலில் எனக்கு இருக்கின்ற அனுபவங்களை வைத்து நான் ரணில்  பாராளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வரும்போது ஒரு விடயத்தை குறிப்பிட்டேன்.  அதாவது ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு ரணில்  பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் உருவெடுப்பார் என்று நான் கூறினேன்.  அது தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.  

இன்று ரணில் பிரதமராகிவிட்டார்.  நான் அன்று கூறிய விடயம் அவ்வாறே நடந்து கொண்டு இருக்கின்றது.  அதனால் பதற்றமடையாமல் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருங்கள். நான் கூறியது  எல்லாம் நடக்கும்.   

அதுமட்டுமன்றி டொலர் இல்லாத ரூபா இல்லாத ஒரு திறைசேரியையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார்.  அதுவும்  மிகவும் தாமதமாகவே ரணிலுக்கு கிடைத்திருக்கின்றது.  அப்படி காலியான வெறுமையான திறைசேரி கிடைத்திருந்தாலும் கூட மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பார்.  

சிறிய தாமதம் ஏற்படும்.  ஆனால் பதற்றப்படாமல் அவசரப்படாமல் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருங்கள்.  பிரச்சினைகளை ரணில் விக்கிரமசிங்க தீர்த்து வைப்பார்  என்றும் வஜிர‍ அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.  

காலி பகுதியில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தின் போதே  இந்த விடயத்தை வஜிர அபேவர்த்தன வெளிப்படுத்தியிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51