தண்டனை சட்டக்கோவையின் சரத்துக்களை திருத்தும் வகையிலும் சமயத்திற்கு எதிராக குரோத தன்மையை வளர்க்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதற்கு எதிரான சட்ட மூலம் தற்போது அதை கொண்டுவர எதிர்பார்த்தவர்களினாலேயே இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நவம்பர் மாதம் 06ஆம் திகதி தேசிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி தண்டனை சட்ட கோவையின் பத்தொன்பதாம் அதிகா ரம் மற்றும் பதினைந்தாம் சரத்துக்களை மாற்றியமைக்க உத்தேசித்தது. இதன்படி தண்டனை சட்டக்கோவையின் சரத்துக்கள் மதம் தொடர்பான பிரசாரங்கள் மற்றும் சமயம், மதம் தொர்பான கருத்துக்களை வெளியிடும் போது அவை தொடர்பில் யாரேனும் அதிருப்தி அடைவார்களாயின் அது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடுகளை செய்யலாம் எனவும் அவ்வாறான குற்றங்களுக்கு, இர ண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சிறுபான்மையின தமிழ் முஸ்லிம் தலைமைகளும் பெரும்பான்மையின பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்தே இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால், பின்பு அச்சட்டத்தை அமுல்படுத்த நினைத்தவர்களே இச்சரத்துக்கள் மத சுதந்திரத்தையும் சமய அமைப்புக்களின் செயற்பாடுகளையும் தடை செய்வதாக கூறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு அந்த திருத்தங்களுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதன்காரணமாகவே இந்த சட்டமுலம் பாராளுமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
நாட்டின் நல்லாட்சிக்கென செயற்படும் தேசிய அரசாங்கம் மதங்களின் மேம்பட்ட செயற்பாடுகளுக்கென உதவ தயாராக வுள்ளது. பௌத்த சமயத்தை வளர்ப்பதற்கென பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இதன்படி அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் பௌத்த சமயத்தின் மேம்பாட்டுக்கென சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. மேலும் தேசிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பௌத்த அறநெறி பாடசாலைகளுக்கெனவும், பௌத்த சமயத்துக்கெனவும் மொத்தமாக 534 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. இது முன் னைய வரவு – செலவுத்திட்டத்தை விட சுமார் நாற்பத்து மூன்று மில்லியன் அதிக மான தொகையாகும்.
எனவே, தேசிய அரசாங்கத்தினால் சமயத் துக்கான முறையான அங்கீகாரம் வழங்க வில்லை என கூறுவதில் எவ்விதமான உண் மையும் இல்லை என அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM