சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறையை தூண்டியவர் கைது – பொலிஸ் பேச்சாளர்

Published By: Digital Desk 5

27 May, 2022 | 01:32 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை பகிர்ந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பொலிஸாரினால் தொடர்ந்தும் விசாரரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதற்கமைய வன்முறைகள் இடம்பெற்ற இடங்களுக்கு நபர்களை அழைக்கும் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே ஒருங்கிணைக்கப்பட்டமை தெரியவந்தது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் சில சமூக வலைத்தள குழுக்கள் பொலிஸாரினால் அடையாளங் காணப்பட்டன. 

இவற்றின் நிர்வாகிகள் (அட்மின்) கணனி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய நேற்றுமுன்தினம் கம்பஹா - ஹரகம்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் அவரது முகநூல் ஊடாக வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை பகிர்ந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதற்கமையவே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவருக்கு எதிராக கணனி குற்றச்சட்டம், தண்டனை சட்டக் கோவை மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-17 15:25:50
news-image

கொழும்பில் கட்டப்பட்டுவரும் பல மாடி ஆடம்பர...

2025-01-17 15:19:31
news-image

தடம் புரள்வு ; மலையக மார்க்கத்தில்...

2025-01-17 15:29:36
news-image

அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லை...

2025-01-17 15:05:10
news-image

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க அனுமதி...

2025-01-17 14:50:19
news-image

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள்...

2025-01-17 14:49:52
news-image

இரு வெவ்வேறு பகுதிகளில் துப்பாக்கிகள் ,...

2025-01-17 14:42:27
news-image

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது...

2025-01-17 14:41:13
news-image

பொலன்னறுவை - தூபாராம பிரதிமை மண்டபத்தைப்...

2025-01-17 14:20:36
news-image

சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ

2025-01-17 14:02:15
news-image

மட்டக்களப்பில் விவசாயத்துக்கு பயன்படாத நிலங்கள் அதிகம்...

2025-01-17 14:02:02
news-image

மட்டு. களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கிய...

2025-01-17 13:23:09